அடுத்த மாதம் மருத்துவ கல்லூரிகள் திறப்பு – ஆளுநர் தகவல்!!
புதுச்சேரியில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் முதற்கட்டமாக மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க வாய்ப்பு உள்ளது என துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மருத்துவ கல்லூரிகள் திறப்பு:
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்புகள் புதிய உச்சம் அடைந்து வருகிறது. நோய் தடுக்க அரசு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டது. பிறகு கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இலவசமாக 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது.
ஜூலை 5க்கு பின் மால்கள் திறக்க அனுமதி? மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு!
இதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனால் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தளர்வுகளின் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி கருவடிக்குப்பம் கோவில் வளாகத்தில் அகோரம் நோட்டரி சங்கம் சார்பாக கோவில் வளாகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இன்று திறந்து வைத்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர், பக்தர்கள் வழிபாட்டு தலங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார். மேலும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டது. இதனால் முதற்கட்டமாக அடுத்த மாதம் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க வாய்ப்பு உள்ளது என துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். அதே போல் பள்ளிகளும் படிப்படியாக திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.