கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பணி நீக்கம் – பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
நாடு முழுவதும் தற்போது ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக சிட்டி குரூப் இன்க் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வேக்சின் கட்டாயம்:
நாடு முழுவதும் தற்போது ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று வெகு வேகமாக பரவி வருகிறது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் சிலர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி வருகிறது.
Post Office இல் 50 ரூபாய் சேமித்தால் 31 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்!
அந்த வகையில் தற்போது சிட்டி குரூப் இன்க் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சிட்டி வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் வரும் ஜன.14ம் தேதிக்குள் வேக்சின் செலுத்த வேண்டும். அவ்வாறு வேக்சின் செலுத்திக் கொள்ளாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிட்டி குரூப் இன்க் நிறுவனத்தின் இத்தகைய அறிவிப்பு அனைத்து ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களுக்கு இது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – விடைக்குறிப்பு வெளியீடு!
அதாவது கூகிள் நிறுவன ஊழியர்களில் வரும் ஜன.18ம் தேதிக்குள் கூகுள் நிறுவனத்தின் வேக்சின் விதிமுறைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாதவர்களுக்கு ஒரு மாதம் Paid விடுமுறை வழங்கப்படும், அதை தொடர்ந்து 6 மாதம் Unpaid விடுமுறை அளிக்கப்படும். அதன் பின்னரும் அவர்கள் வேக்சின் செலுத்திக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் கட்டாயம் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூகிள் நிறுவனத்தை தொடர்ந்து பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.