30க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வரும் காலரா தொற்று – WHO எச்சரிக்கை!
உலக சுகாதார அமைப்பானது தற்போது 30க்கும் மேற்பட்ட நாடுகளில் காலரா தொற்று பரவி வருவது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நோய்த்தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.
காலரா தொற்று:
அசுத்தமான நீர் மற்றும் உணவு பொருட்கள் போன்றவற்றின் மூலம் பரவும் காலரா தொற்றானது, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளில் வழக்கத்தை விட காலரா தொற்று மிக அதிக எண்ணிக்கையில், அதிக வீரியத்துடன் பரவி வருகிறது.
ஷாக் நியூஸ்.. தனியார் பள்ளிகளில் கட்டணம் 11.69% உயர்வு.. 2023 – 2024ம் கல்வியாண்டு முதல் அமல்!
Exams Daily Mobile App Download
குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் 20க்கும் குறைவான நாடுகளில் மட்டுமே, காலரா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் காலரா பரவி உள்ளது. இதனால், லெபனான், மாளவி, ஹைதி, மற்றும் சிரியா போன்ற நாடுகளில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாறிவரும் பருவநிலை மற்றும் காலமாறுபாடு காரணமாக தான் நடப்பு ஆண்டில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.