குழந்தை தொழிலாளர்கள் முறையை முற்றிலுமாக ஒழிப்போம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி!
தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர்கள்:
நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளும் நாளைய தலைவர்கள். அவர்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும். ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க வேண்டும். குழந்தைகள் பணிபுரிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை பாதுகாக்க குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளது. 1986-ம் ஆண்டு அரசு குழந்தை தொழிலாளர் சட்டம் இயற்றியுள்ளது. அதன் படி கட்டிட வேலை, சாயம் ஏற்றுதல், நெசவாலை, தீப்பெட்டி தயாரித்தல், சுவரொட்டி ஒட்டுதல், உணவு விடுதிகளில் மேசை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி – முதல்வரிடம் கோரிக்கை!!
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழிற்சாலைகளில் அவ்வப்போது ஆய்வு செய்து குழந்தை தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வைக்கவில்லை என உறுதி செய்து வருகிறது. இளம் வயதில் சுமைகளை சுமந்து வேலை செய்யும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு இனிமையான கல்வியை வழங்க வேண்டும். சமுதாயத்தின் சிற்பிகளாக அவர்கள் மாற வேண்டும் எனவும் கூறினார்.
TN Job “FB Group” Join Now
அரசு, தொழிற்சாலைகளில் மீட்கப்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து அவர்களை பாதுகாத்து வருகிறது. கல்வி கற்க தேவையான புத்தகங்கள், நோட்டுகளை இலவசமாக வழங்குகிறது. கல்வி காலம் முழுமைக்கும் ரூபாய் 500 மாதந்தோறும் உதவித் தொகையாக வழங்கி வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களையும் அரசு குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது. அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு அரசு சாரா நிறுவனங்களும் , பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். குழந்தை தொழிலாளர்கள் இல்லாத தமிழகமாக மாற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.