![தமிழக மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நாளை (டிச.12) முதல் புது பாடப்புத்தகம்! தமிழக மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நாளை (டிச.12) முதல் புது பாடப்புத்தகம்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/12/தமிழக-மிக்ஜாம்-புயலில்-பாதிக்கப்பட்ட-மாணவர்களுக்கு-முக்கிய-அறிவிப்பு-.jpg)
தமிழக மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை (டிச.12) முதல் புது பாடப்புத்தகம்!
தமிழகத்தில் மிக்ஜாம் புயலில் பாட புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு நாளை (டிச. 12) முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரசு அறிவிப்பு
தமிழகத்தின் தலைநகர் சென்னையை மிக்ஜாம் புயல் கடந்த வாரம் தாக்கியது. அதனால் ஏராளமான சேதாரம் ஏற்பட்டது. மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் மக்கள் கடுமையான சிரமத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த மழை வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய பாட புத்தகங்களை இழந்து இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு அருமையாக அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.
TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இது தான் சூப்பர் வழி!! மிஸ் பண்ணிடாதிங்க!!
அதாவது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு நாளை (டிச.12) முதல் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களுக்கு இலவசமாக பாட புத்தகங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளம் பாதித்த இடங்களில் ₹6,000 நிவாரணத் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.