ஓய்ந்தது மிக்ஜாம் புயல் – இன்னும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு – சென்னையின் இன்றைய நிலவரம்!
தமிழகத்தின் தலைநகரை மிக்ஜாம் புயல் உலுக்கி இருக்கும் நிலையில், இன்னும் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
பொதுமக்கள் திண்டாட்டம்
சென்னையில் நேற்று முன்தினம் முதல் மிக்ஜாம் புயல் தாக்க தொடங்கியது. நேற்று புயல் தீவிரமடைந்த நிலையில் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாய் காட்சி அளித்தது. மேலும் வீடுகளில் இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லை என்பதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் சென்னை முழுவதும் ஸ்தம்பித்து இருப்பதால் அத்தியாவசிய பொருள்களான பால், மாவு, பிரட் போன்றவை கிடைக்காமல் மக்கள் திண்டாடினார்கள்.
தேர்வு வினாத்தாள் கசிந்தால் அதிரடி நடவடிக்கை – பல்கலைக்கழகம் எச்சரிக்கை!
இன்று புயல் ஓய்ந்த நிலையில், நிலைமையை சரி செய்ய ராணுவத்தை அரசு இறக்கி இருக்கிறது. மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிப்படியாக ஒவ்வொரு பகுதிகளாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருப்பதால் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பால், பிஸ்கட், பிரெட் போன்ற பொருட்கள் ஸ்டாக் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. சில கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் எதுவுமே ஸ்டாக் இல்லை என்பதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.