சென்னை மெட்ரோ நிலையங்களில் 1000 பேட்டரி வாகனங்கள் இயக்கம் – நிர்வாகம் தகவல்!!
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பேட்டரியில் இயங்கும் வாகனங்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
வாகனங்கள் இயக்கம்
சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற மாநகரங்களில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி இந்த ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். அதன்படி, தமிழகத்திலும் சென்னை மாநகரத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை மற்றும் கோயம்பேடு வரை பல்வேறு வழித்தடங்கள் வழியாக இயக்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதற்கிடையில், மாதவரம், சோழிங்கநல்லூர், சிறுசேரி போன்ற பகுதிகளிலும் மெட்ரோவை இயக்க முடிவு செய்த நிர்வாகம் அதற்கான கட்டுமானப்பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பேட்டரியில் இயங்கும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.