சென்னை மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு பாலம்.. மத்திய சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல்!
சென்னை மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு பாலம் அமைக்கும் பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ரூ.5,800 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் கட்டப்படவுள்ளது.
ஈரடுக்கு பாலம்:
தமிழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக அரசு ரூ.1,815 கோடியை ஒதுக்கீடு செய்தது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் அடைந்ததன் காரணமாக இப்பணியானது கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்துள்ளதால் மதுரவாயல் – துறைமுகம் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வெல்பவரா… புதிய டிடிஎஸ் வரி முறை – நிதியைமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!
Follow our Instagram for more Latest Updates
மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், அமஞ்சிகரை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை வழியாக இப்பாலம் துறைமுகத்தை சென்றடையும் படி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து சுமார் ரூ. 5,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இந்த மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு பாலம் அமைக்கும் பணிக்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.
மேலும் பாலத்தின் தூண்களால் நீரோட்டத்திற்கு தடை ஏற்பட கூடாது என்றும் நிபுணர் குழு நிபந்தனை விதித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு நிபுணர் குழுவின் நிபந்தனைகளுடன் விரைவில் பாலம் அமைக்கும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளது.