டிசம்பர் 31 வரை காலஅவகாசம் நீட்டிப்பு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
நடப்பாண்டில் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஆண்டுதோறும் தொழில் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இந்த ஆண்டிற்கான தொழில் உரிமம் புதுப்பிக்க டிசம்பர் 31 வரை காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அறிவிப்பு:
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மே மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் ஆண்டுதோறும் தொழில் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடிக்கு மேல் வருவாய் வருகிறது.
Jio, Airtel, VI நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டம் – ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்!
சென்னை மாநகராட்சியில் இதுவரை 73,665 பேர் தொழில் உரிமம் பெற்றுள்ளனர். மாநகராட்சி முழுவதும் சொத்து வரிக்கு அடுத்தபடியாக தொழில் உரிமம் புதுப்பித்தல் மூலமாகவே வருமானம் கிடைக்கிறது. இந்த தொழில் உரிமம் புதுப்பிக்க ஒரு நிதியாண்டிற்குள் கால அவகாசம் வழங்கப்படும். வழக்கமாக ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு மேல் 30 ஆம் தேதிக்குள் புதுப்பிக்கும் அனைவர்க்கும் தொழில் உரிம கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதமும், மே 1 ஆம் தேதி முதல் புதுப்பிக்கும் தொழில் உரிமங்களுக்கு 100 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்படும்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு – செப்டம்பர் 7 முதல் கலந்தாய்வு!
ஆனால் இந்த ஆண்டு மாநகராட்சி வருவாய் துறையினர் கடந்த மார்ச் மாதம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்ததால், பெரும்பாலான தொழில் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. அதனால் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அபாரதமின்றி தொழில் உரிமம் புதுப்பிக்க மாநகராட்சி அவகாசம் வழங்கியது. தற்போது சென்னையில் தொழில் உரிமத்தை அபராதமின்றி புதுப்பிப்பதற்கான அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 45,859 உரிமங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய உத்தரவு காரணமாக உரிமம் புதுப்பிக்காத 27,806 தொழில் நிறுவனங்கள் பயனடைவார்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.