9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப்பிரிவில் மாற்றம் – முதல்வர் உத்தரவு!

0
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப்பிரிவில் மாற்றம் - முதல்வர் உத்தரவு!
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப்பிரிவில் மாற்றம் - முதல்வர் உத்தரவு!
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப்பிரிவில் மாற்றம் – முதல்வர் உத்தரவு!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் 50 தலைவர்களை பற்றி அறிய 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாக பாடப்பிரிவை அரசு சேர்த்துள்ளது.

பாடப்பிரிவு சேர்ப்பு

உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின் படி பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 50 தலைவர்களை பற்றி அறிய தனியாக பாட பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 9 ஆம் வகுப்பு பாடத்தில் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. அதே போல 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் அப்துல்கலாம், பழங்குடியின போராளி பிர்சா முண்டா உள்ளிட்ட தலைவர்கள், புரட்சியாளர்கள் என 50 பேரின் வாழ்க்கை வரலாற்றை கல்வித்துறை சேர்த்துள்ளது.

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இனி பொதுத்தேர்வு – அரசின் அதிரடி முடிவு!

மேலும் பிர்சா முண்டா, சந்திர சேகர் ஆசாத், பேகம் ஹஸ்ரத் மஹால், ஜோதிபா பூலே, கவுதம புத்தர் மற்றும் சத்ரபதி சிவாஜி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு 9 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், சுக்தேவ், லோகமான்ய திலக், ரோஷன் சிங், கோபால கிருஷ்ண கோகலே, காந்தி, குதிராம் போஸ் ஆகியோரை பற்றி 10 ஆம் வகுப்பு பாட புத்தகத்திலும், டாக்டர் அம்பேத்கர், பகத் சிங் உள்ளிட்டவர்களைப் பற்றி 11 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலும், ரவீந்திரநாத் தாகூர், குருநானக் தேவ். சிவி ஆகியோர் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் நடப்பு கல்வியாண்டான 2023 – 2024ல் இருந்து மாணவர்களுக்கு அமலாகும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!