தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் பிற மாவட்டங்களில் வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. வெளுத்து வாங்கிய கனமழையால் காஞ்சிபுரம், திருவாரூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர்நிலைகள் நிரப்பியதால் உபரி நீர் தெருக்களில் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. டிசம்பர் மாத தொடக்கத்தில் மழை குறைந்து வறண்ட வானிலை நிலவியது. இந்த நிலையில் கடந்த வாரம் ஆங்காங்கே கனமழையும் மிதமான மழையும் பெய்தது. தினசரி தமிழகத்தின் வானிலை குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. இன்றைய வானிலை அறிக்கை கீழ்வருமாறு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 3% அகவிலைப்படி உயர்வு!
வானிலை தகவல்
14.01.2022: உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.
15.01.2022, 16.01.2022: கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17.01.2022, 18.01.2022: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கும்.