தேசிய மாணவர் படையில் 33 சதவிகித பெண்கள் – பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்!!
டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அணிவகுப்பில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், இந்திய நாட்டில் எல்லைகளிலும், கடலோர மாநிலங்களிலும் உள்ள 1100 பள்ளிகளில் மாணவர்கள் தேசிய மாணவர் படையில் சேர்க்க தேர்ந்தெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
தேசிய மாணவர் படை:
தேசிய மாணவர் படை இந்தியாவில் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 30 லட்சம் பேர் தேசிய மாணவர் படையில் உள்ளனர். பள்ளி & கல்லூரி பருவத்திலும் சமூகத்தின் மீது அக்கறை செலுத்தும் விதத்தில், இள வயதினரை வழிநடத்த, என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படை அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வு – போக்குவரத்து துறை அறிவிப்பு!!
இந்நிலையில் இந்திய நாட்டில் உள்ள எல்லை, கடலோர பகுதிகள் போன்ற பின்தங்கிய பகுதிகளில் உள்ள 1100 பள்ளி மாணவர்களை தேசிய மாணவர் படையில் சேர்க்க திட்டமிட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு படையின் அணிவகுப்பில் பேசிய அவர் கூறியதாவது, “இந்திய பிரதமர் மோடி நாட்டின் தேசிய மாணவர் படையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் முதல் கட்டமாக நாட்டின் கடலோர எல்லை பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு – மத்திய அரசு விளக்கம்!!
இதுவரை தேசிய மாணவர் படையில் 28 சதவிகித பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டு 33 சதவிகிதம் பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். தேசிய மாணவர் படையில் சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை உண்டு”, இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்