மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு – வெளியான முடிவுகள்!!
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுகளுக்கான (CTET) தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளில் மிகவும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு
இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர மத்திய மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி கேந்திரிய வித்யாலயா மற்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ‘சி-டெட்’ (CTET) எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமானதாகும். சிபிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வு ஆண்டு தோறும் பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுகள் மொத்தம் இரண்டு தாள்களை கொண்டது. தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகவும் பணிபுரியலாம். கொரோனா நோய்த்தொற்றால் கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய CTET தேர்வுகள் இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நாடு முழுவதும் மொத்தம் 135 நகரங்களில் நடைபெற்றது.
அரசு வேலைக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் – பேரூராட்சி பணியாளர் சங்கம் கோரிக்கை!!
தேர்வு முடிவுகளில் முதல் தாளில் 4,14,798 பேரும், இரண்டாவது தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்வின் முடிவுகள் https://ctet.nic.in/, https://cbse.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சி-டெட் தேர்வில் முதல் தாளை 12 லட்சத்துக்கு அதிகமானோரும் இரண்டாவது தாளை 11 லட்சத்துக்கு அதிகமானோரும் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் தேர்ச்சி சதவீதம் மிக குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.