அரசு வேலைக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் – பேரூராட்சி பணியாளர் சங்கம் கோரிக்கை!!
இளைஞர்கள் அரசு வேலையில் சேருவதற்கான வயது வரம்பை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை அதிகரிக்க வலியுறுத்தி மதுரை அரசு பேரூராட்சி பணியாளர் சங்க மாநிலத்தலைவர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அரசு வேலை:
அரசுபணியாளர்களுக்கான ஓய்வு வயது 60வது ஆக மாநில அரசு அதிகரித்து வருகிறது. அதே போல் அரசு பணியில் சேரும் இளைஞர்களுக்கான வயதை உயர்த்தக்கோரி மதுரை அரசு பேரூராட்சி பணியாளர் சங்க மாநிலத்தலைவர் பிச்சைமுத்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘அரசு பணியாளர்களுக்கான ஓய்வு வயதை 60ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள்.
சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு – தேர்வு தேதி அறிவிப்பு!!
வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் வகையில் அரசு வேலையில் சேரும் இளைஞர்களுக்கான வயதை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை உயர்த்தி அரசாணைகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் என்பது தவிர்க்கப்படும். இளைஞர்களின் நலன் கருதி தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை பரிசீலித்து, அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் please