ஓய்வூதியதாரர்கள் ஆன்லைன் மூலமாக உயிர் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்…’இந்த’ ஆப் போதும்!!
மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் உயிர் வாழ்நாள் சான்றிதழை வங்கிகளுக்கு சென்று சமர்ப்பிக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த நிலையில் ஆன்லைன் மூலமாக இச்சான்றிதழை சமர்ப்பிக்க ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உயிர் வாழ்நாள் சான்றிதழ்
இந்தியாவில் அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதிய தொகையை ஓய்வூதியதாரர்கள் பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் உயிர் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதிக்குள் வழங்க வேண்டும். அதாவது நவம்பர் 30ம் தேதிக்குள் வழங்க வேண்டியது கட்டாயமாகும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் தற்போது வங்கி, தபால் அலுவல பணியாளர்கள் ஓய்வூதியதாரர்கள் வீடுகளுக்கே சென்று சான்றிதழை பெற்று வருகின்றனர். தற்போது ஓய்வூதியதாரர்கள் தங்களின் உயிர் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிகளுக்கு அலைய தேவையில்லை. இதனை வீட்டில் இருந்த சமர்ப்பிக்க மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சேவையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழக தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு – தாளாளர் கைது!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ஜீவன் பிரமான் இணையதளத்தின் மூலமாக ஓய்வூதியதாரர்கள் தங்களின் உயிர் வாழ்நாள் சான்றிதழை சமரிப்பிக்கலாம். அதன்படி ஓய்வூதியதாரர்கள் https://jeevanpramaan.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது Jeevan Pramaan ஆப் வாயிலாகவோ உயிர் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இந்த ஆப்பில் face recognition வசதிகளும் உள்ளது. இதன் மூலமாக தகுதியான நபர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.