என்.டி.ஏ நுழைவுத்தேர்வு ஆன்லைன் முறையில் எழுதலாம் – மத்திய அரசு அறிவிப்பு!!
நாட்டின் பல படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை நிறுவனம் (என்.டி.ஏ) சமையல் கலை படிப்புக்கான நுழைவுத் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்துவதாக அறிவித்துள்ளது.
ஆன்லைன் நுழைவுத்தேர்வு:
மத்திய அரசு 2017ம் ஆண்டு முதல் இந்திய தொழில்நுட்ப கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. இது தவிர மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுகள், சமையல் கலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளையும் நடத்துகிறது. இதுநாள் வரை மாணவர்கள் நேரடியாக தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வுகளை எழுதி வந்தனர்.
ஆகஸ்ட் மாதம் JEE, NEET 2021 தேர்வுகள்? வெளியான தகவல்!
தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக மத்திய அரசானது மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் முறையில் தேர்வுகளை எழுதும் வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்சி ஹோட்டல் மேலாண்மை படிப்புகளுக்கு சென்னை, பெங்களூரு, கோவா, ஐதராபாத், சண்டிகர், கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்களில் உள்ள 74 கல்லூரிகளில் இளநிலை படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கு தேசிய தேர்வுகள் முகமை இன்று நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஜூலை 20ம் தேதி வரை இந்த நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த தேர்வை ஆன்லைனில் எழுதலாம் என்று முகமை அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வை தங்களின் வீடுகளில் இருந்து செல்போன் அல்லது லேப்டாப் மூலம் எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நீட் தேர்வு மற்றும் ஐ.ஐ.டிக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் போன்ற அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்படலாம் என்று கல்வியாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.