மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டதை தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு குறித்த விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதற்கான அறிவிப்பை மார்ச் 7ம் தேதியன்று மத்திய அரசானது வெளியிட்டது. இதன் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் இந்த அகவிலைப்படி உயர்வானது 2024 ஜனவரி 1ம் தேதி அமல்படுத்தப்படும் எனவும் அரசானது தெரிவித்தது. இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெற்றுள்ளார்கள்.
மத்திய அரசு அறிவித்த இத்தகைய அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து தமிழக அரசானது மார்ச் 13ம் தேதி அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. இவ்வாறு ஒவ்வொரு மாநிலங்களுக்கு வழங்கப்பட ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை 7வது ஊதிய குழுவானது தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப்படி நிவாரணம் (HRA), வீட்டு வாடகை கொடுப்பனவு, குழந்தைகளுக்கான கல்வி கொடுப்பனவு, சொந்த போக்குவரத்துக்கான மைலேஜ் கொடுப்பனவு போன்ற இதர ஊதிய தொகைகளுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டிற்குள் ஊழியர்கள் சம்பளத்தில் வரும் மாற்றம் – அரசின் புதிய திட்டம்!
மாநிலத்தின் பெயர் | அகவிலைப்படி உயர்வு | முந்தைய சம்பளம் | தற்போதைய சம்பளம் |
கர்நாடகா | 3.5% | 38.75% | 42.5% |
கேரளா | 2% | 7% | 9% |
மத்தியப் பிரதேசம் | 4% | 42% | 46 % |
அசாம் | 4% | 46% | 50% |
குஜராத் | 4% | 42% | 46% |
ஒடிசா | 4% | 46% | 50% |
சத்தீஸ்கர் | 4% | 42% |
46% |