தமிழகத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள Project Associate-I பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் |
பணியின் பெயர் | Project Associate-I |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CECRI காலிப்பணியிடங்கள்:
Project Associate-I பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
06.05.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து 50 % மதிப்பெண்களுடன் B.E/B.Tech in Electrical and Electronics Engineering / Electronics and Communication Engineering / Electronics and Instrumentation Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
மாத ஊதியம்:
Project Associate-I பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் தங்களின் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து The Administrative Officer, CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi – 630 003 என்ற முகவரிக்கு 06.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.