தமிழகத்தில் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிசிடிவி கேமராக்கள்:
தமிழகத்தில் பெரும்பாலும் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறும் இடத்தில் சிசிடிவி கேமராக்களில் கண்காணிப்பு குறைபாடு இருப்பதன் காரணத்தினால் சரியாக குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் தற்போது வரையிலும் பல்வேறு குற்றங்கள் தொடர்ந்தபடி இருக்கின்றன. இந்நிலையில், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கட்டாயமாக சிசிடிவி கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் தக்காளி விலை கிலோ ரூ.30 குறைவு – நிம்மதியில் பொதுமக்கள்!
அதன் அடிப்படையில், பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வாகனங்கள் தற்போது திருடப்பட்டு வரும் நிலையில் கட்டாயமாக ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.