CBSE 12ம் வகுப்பு மதிப்பீடு முறை ஜூன் 14ம் தேதி அறிவிப்பு – வெளியான தகவல்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான மதிப்பீடு முறை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
12ம் வகுப்பு மதிப்பீடு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அறிவித்தது. சிபிஎஸ்இ வாரியம் அதனை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி அன்று சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பீட்டு அளவுகோல்களை தீர்மானிக்க 12 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்றை நியமித்திருப்பதாக அறிவித்தது. 12 ஆம் வகுப்புக்கான மதிப்பீட்டு முறை “நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோல்களை” அடிப்படையாக கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
LPG சமையல் எரிவாயு சிலிண்டர் பயனர்கள் கவனத்திற்கு – HP, Indane, Bharat கேஸ் இணைப்பு மாற்றம்!
இந்த அறிக்கை வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட குழுவினர் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறார்கள் என்று சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்தது. சிபிஎஸ்இ செயலாளர் திரு அனுராக் திரிபாதி அவர்கள், வாரியம் சரியான நேரத்தில் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் என்று கூறினார். மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க உதவியாக விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
TN Job “FB Group” Join Now
அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான முறையில் மதிப்பெண் வழங்கும் வகையில் மதிப்பீடு அளவுகோல் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், பல ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் வழங்குமாறு கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், சிபிஎஸ்இ வகுப்பு 12 மதிப்பீட்டு அளவுகோல் ஜூன் 14ம் தேதி வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
Nios 12th result 2021 yapa