தமிழகத்தை புரட்டி போடும் மழை.. இவங்கெல்லாம் கவனமா இருக்கனும் – மருத்துவர்கள் அறிவுரை!
தமிழகத்தில் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக எக்கசக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புயலால் ஏற்படும் நோய்களில் இருந்து முதியோர்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
மருத்துவர்கள் அறிவுரை:
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் வங்க கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் கனமழையால் ஏகப்பட்ட சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை காலங்களில் மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி இருக்கின்றனர்.
தமிழகத்தில் டிச.12 (திங்கட்கிழமை) பல பகுதிகளில் மின்தடை – முக்கிய விவரங்கள் உள்ளே!
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் மழையால் தேங்கி இருக்கும் தண்ணீரால் தேள், பாம்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் உயிரினங்கள் மக்கள் குடியிருப்பிற்குள் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே அதில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் முதியோர் மற்றும் குழந்தைகள், ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் மழை காலங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வீட்டில் அவ்வப்போது தயார் செய்த சூடான உணவுகளை தான் உண்ண வேண்டும். ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
மேலும் மழை காலங்களில் தண்ணீரை சூடு செய்து பருக வேண்டும். வைரஸ் மற்றும் ‘ப்ளூ’ காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சுத்தம் இல்லாத தண்ணீரால் மஞ்சள் காமாலை, டைப்பாய்டு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் தண்ணீரை சூடு செய்து குடிக்க வேண்டும். மேலும் மழை நீரால் கொசு அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா உள்ளிட்ட நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் பொதுமக்கள் உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி இருக்கின்றனர்.