இனி ஆன்லைன் மூலமாக ஆவின் பொருட்களை வாங்கலாம் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை ஆன்லைன் மூலமாக பெறுவதற்கு இணையதள செயலி ஒன்று உருவாக்கப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆவின் பொருட்கள்
தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, துறை வாரியான கொள்கை விளக்கக் குறிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பால் வளத்துறை தொடர்பாக பால் வளத்துறை அமைச்சர் S.M நாசர் அவர்கள் கொள்கை விளக்கக்குறிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மீண்டும் கட்டுபாடுகள் அமல்.. மாநகராட்சி விளக்கம்!
இதில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை இனி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக பெறுவதற்காக புதிய செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் ஆவின் பொருட்கள் விற்பனை அதிகப்படுத்தப்படுவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தால் பொதுமக்கள் எந்த நேரத்திலும் வீட்டிலிருந்தபடியே ஆவின் பொருட்களை பெற்று பயன் அடையலாம் என்று கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download