பட்ஜெட் 2023: வரி செலுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – வெளியாக இருக்கும் நிதியமைச்சரின் அறிவிப்பு!
மத்திய அரசு 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் வரி செலுத்துபவர்களுக்கு பெரிய நிவாரணம் மற்றும் வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி:
நாட்டில் 2023 – 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்கள் முதல் வணிகர்கள் வரை என அனைவரும் பல வித எதிர்பார்புகளை கொண்டுள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில், இதில் பல ஆண்டுகளுக்கு பிறகு வரி அடுக்குகள் மற்றும் வரி வரம்பு ஆகியவற்றில் மாற்றம் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதில் வரி செலுத்துவோரின் சுமையை குறைக்கும் வகையில், TDS கட்டமைப்பை அறிமுகப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்பான TDS நடைமுறைகள் சுலபமாக்கப்படலாம். இதே போன்று நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு வரிகளில் தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளை காப்பீடு திட்டத்தில் இணைக்கும் பணி – 28ம் தேதி தொடக்கம் !
தற்போது, வருமான வரி விதிகளின் கீழ், வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் 5 சதவீதம் வரை வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில், அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, கொரோனா பரவல், பணவீக்கம் ஆகியவற்றால் வருமான வரி விலக்கு வரம்பில் ரூ.5 லட்சம் வரை பட்ஜெட்டில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.