நாடு முழுவதும் BSNLன் 5ஜி சேவைகள் பயன்பாடு – மத்திய அரசு அறிவிப்பு!
நாட்டின் தற்போது குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், BSNL நிறுவனத்தின் 5ஜி சேவை குறித்த புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பிஸ்னம் 5ஜி சேவை:
தற்போது வரை நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் முழுவதும் 4 ஜி வேகத்திலான இணைய சேவைகள் தான் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வேகம் அனைத்து தரப்பு பயன்பாடுகளுக்கும் மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் கடந்த வருடம் இந்தியாவில் 5ஜி இணைய சேவைகளுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு நடப்பு ஆண்டில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்பட்டதில் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான ஒதுக்கீடுகளை பெற்றது.
பெற்றோர்களின் கவனத்திற்கு.. School Fees இனி இதன் மூலம் கட்டலாம் – வரவுள்ள புதிய முறை!
Exams Daily Mobile App Download
அதன்பிறகு Airtel மற்றும் Vi நிறுவனங்கள் உள்ளது. ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் BSNL நிறுவனம் தற்போது வரை 3ஜி சேவையை தான் வழங்கி வரும் நிலையில் 2023ல் 4ஜி சேவை BSNL பயனர்களுக்கு கிடைக்கும் என்று அறிவித்தது. ஆனால் தற்போது பாராளுமன்றத்தில் மத்திய அரசு BSNL மூலம் 5ஜி சேவையை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக டாடா நிறுவனத்தின் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.