தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு – அரசாணை வெளியீடு!!

0
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு - அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு - அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு – அரசாணை வெளியீடு!!

மத்திய அரசு, மாநில அரசுகள் கருப்பு பூஞ்சையை தொற்று நோயாக அறிவிக்க அறிவுறுத்தியதை அடுத்து தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு:

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் நாடு முழுவதும் காட்டுத்தீயை போல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல வகையிலான கட்டுப்பாடுகளும் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. இருப்பினும் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. அனைத்து மாநில அரசுகளும் தங்களின் முழு சக்தியையும் பயன்படுத்தி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

தமிழகத்தில் மே மாத மின் கட்டணம் – நுகர்வோர் கணக்கிட அனுமதி!!

கொரோனா வைரஸ் ஒரு புறம் இருக்க, புதிதாக நாட்டில் ஒரு சில மாநிலங்களில் கருப்பு பூஞ்சை (Mucormycosis) என்ற நோய் பரவி வருகிறது. இது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களையும், தொற்றில் இருந்து மீண்டவர்களையும் அதிக அளவில் பாதித்து வருகிறது. இதனால் தொற்று நோய்கள் சட்டம் 1897 ன் கீழ் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று தமிழக அரசு அதன்படி, கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய அரசு, மேலும், கருப்பு பூஞ்சை நோயை கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளை குறித்த வழிகாட்டுதல்களையும் வெளியிட்டு மாநில அரசுகள் அதனை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!