பிறப்பு & இறப்பு சான்றிதழ் பெற இனி ‘இவை’ கட்டாயம் – அரசு உத்தரவு!

0
பிறப்பு & இறப்பு சான்றிதழ் பெற இனி 'இவை' கட்டாயம் - அரசு உத்தரவு!

தமிழகத்தில் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆவணம் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் புதிய உத்தரவை தெரிவித்துள்ளார்.

பிறப்பு இறப்பு சான்றிதழ்:

பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு தனிப்பட்ட மனிதனின் அனைத்து வகையான பதிவுகளும் அரசிடம் கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். குழந்தைகள் பிறந்தவுடன் மருத்துவமனையிலேயே பிறப்பு சான்றிதழ்களுக்கான பதிவுகள் நடத்தப்பட்டு வழங்கப்படுகிறது. அதை போல் ஒரு நபர் இறந்த பிறகு மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டு அவருக்கான இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அவர்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ் குறித்து புதிய உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். அதன்படி அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக சி ஆர் எஸ் அமைப்பின் கீழ் பிறப்பு இறப்பு சான்றிதழை பதிவு செய்யும்போது கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

தமிழக மாணவர்கள் கவனத்திற்கு.. நாளை (பிப்.15) சிறப்பு முகாம் – அரசு முக்கிய அறிவிப்பு!

பிறப்பு சான்றிதழ் கோரிக்கையின் போது தாய் அல்லது தந்தையின் ஆதார் எண்ணையும், இறப்பு சான்றிதழின் போது உயிரிழந்தவரின் ஆதார் எண்களையும் பதிவேற்ற வேண்டும். கடந்த மாதம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு விபரங்கள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி பதிவு நடவடிக்கைகளின் போது ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!