6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் பீகார் மாநிலத்தில் பிப்ரவரி 8ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
பீகார் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. பின்னர் தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக கல்வி நிறுவனங்களை திறந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதன்படி படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. பீகாரில் ஏற்கனவே ஜனவரி 4ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது.
தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களின் நிலை – கல்வித்துறைக்கு உத்தரவு!!
தற்போது வெளியான அறிவிப்பின் படி, 6 முதல் 8ம் வகுப்பு வரை பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில கல்வித்துறை கூறியுள்ளது. மேலும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட விதிமுறைகளான, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்