மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் “பிக்பாஸ்” தாமரை – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தாமரை செல்வி. அவர் சென்ற வாரம் எலிமினேட் செய்யப்பட்டாலும், மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் தாமரை செல்வி:
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்ட நிலையில், அதில் தொலைக்காட்சி பற்றி தெரியாமல் வந்தவர் தான் தாமரை செல்வி. அவர் ஒரு நாடக கலைஞர் பிக்பாஸ் வீட்டில் 95 நாட்களை கடந்து மக்களின் பெரிய ஆதரவுடன் அவர் விளையாடி இருக்கிறார். இந்நிலையில் அவர் இறுதி சுற்றில் நிச்சயம் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
கடனில் சிக்கித் தவிக்கும் ‘பிக் பாஸ்’ புகழ் தாமரை செல்வியின் குடும்பம் – சோதனைகளை கடந்த சாதனை!
ஆனால் அவர் திடீரென நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். அதனால் தாமரை ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அவர் எலிமினேட் செய்யப்பட்டதும் பலர் அவரிடம் அன்பை காட்டி வருகின்றனர். நீங்கள் நிகழ்ச்சியில் வெற்றி பெறாமல் இருந்தாலும் மக்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
இனி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இல்லத்தரசியாக நடிகை நதியா? ஷாக் ப்ரோமோ ரிலீஸ்!
அதன் படி தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தாமரை செல்வி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின் செய்தார். அந்த வரிசையில் தாமரையும் களமிறங்க இருப்பதாக வெளியான செய்தியால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.