விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் ஆரம்பித்த குரூப்பிஸம் – ஒரே கேங்கில் பிரியங்கா, நிரூப் & அபிஷேக்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூப் மூவரும் குரூப்பிஸம் பற்றி பேசுவது போல இருக்கிறது.
‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி:
சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி கடந்த 1 வாரமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை 18 போட்டியாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் நேற்று தான் முதன் முறையாக எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. ஒரு வாரத்திற்கு பின்னர் தற்போது தான் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது என்று கூற வேன்டும். நேற்று தலைவர் போட்டிக்கான சண்டையில் பலரும் முட்டிக் கொண்டனர் என்று தான் கூற வேண்டும். அதில் இறுதியாக தாமரைச்செல்வி வெற்றிவாகை சூடினார்.
விஜய் டிவியில் புதிய திருப்பங்களுடன் “பாரதி கண்ணம்மா” சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
இன்று முதல் ப்ரோமோவில் அபிஷேக் வீட்டில் இருக்கும் அனைவர் பற்றியும் கூறுகிறார். ஒரு சிலரை குறிப்பிட்டு அவர்கள் இந்த வீட்டில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள் என்றும் அப்பாவியாக சிலர் இருக்கின்றனர் என்றும் கூறுகிறார். தற்போது அடுத்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூப் மூவரும் பேசுகின்றனர். அப்போது மூவரும் ஒரே போலவே ஒரு சிலருக்கு டிஸ்லைக் பட்டன் கொடுத்து இருக்கின்றனர்.
‘எத்தனை நாளைக்கு தான் எல்லாத்தையும் கனவுலையே காமிப்பீங்க’ – பாரதி கண்ணம்மா முதல் ரோஜா வரை!
இதனால் மூவரும் கேங்காக இருப்பது போல தோன்றுகிறது என்று பிரியங்கா கூறுகிறார். எதார்த்தமாக நடைபெற்ற ஒரு விஷயம் இப்படியாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விட்டது. ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் நேற்று தான் நாமினேஷன் முடிந்தது. அனைவரின் உண்மை முகங்களும் தற்போது தான் தெரிய வருகிறது.