ப்ரியங்கா, தாமரையை குறி வைக்கும் ‘பிக்பாஸ்’ போட்டியாளர்கள் – இந்த வார நாமினேஷன்! வெளியான 3வது ப்ரோமோ!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய வாரத்துக்கான நாமினேஷன் பிராஸசில் போட்டியாளர்கள் அக்ஷரா, ராஜு, பாவனி, அபிநய், நிரூப் ஆகியோர் ப்ரியங்கா மற்றும் தாமரையை குறி வைப்பது போல 3வது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ப்ரோமோ
மக்களின் பேராதரவுடன் 50வது நாளை நெருங்கி இருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி தற்போது போட்டிக்களமாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இந்த சீஸனின் போட்டியாளர்கள், டாஸ்க் என்று வரும் போது அடித்து பிய்த்துக் கொள்வதும், மற்ற நேரங்களில் கூடி ரகளை செய்வதுமாக காணப்பட்டு வருகின்றனர். அதிலும் சிலர் சண்டை நடக்கும் நேரங்களில் சத்தமே இல்லாமல் இதுவரை வேடிக்கை மட்டும் பார்த்து வருகின்றனர்.
உச்சகட்ட மகிழ்ச்சியில் ‘பாக்கியலட்சுமி’ இனியா – என்ன காரணம் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு!
தவிர இந்த ‘பிக்பாஸ்’ சீசன் 5ன் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு ஆளுக்கும், ஒவ்வொருவரோடு பிரச்சனை உருவாகிறது. என்னதான் வார இறுதியில் கமல்ஹாசன் வந்து ஒவ்வொரு பிரச்சனையை தீர்த்து வைத்தாலும் அது முடிவுக்கு வருவது போல தெரியவில்லை. இப்படி இருக்க இன்றைய நாளுக்கான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தலைவர் பதவிக்கான டாஸ்கில் போட்டியாளர்கள் ப்ரியங்கா மற்றும் தாமரைக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த வாராத்திற்கான நாமினேஷன் ப்ராசஸும் நடைபெறுகிறது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி நிறுத்தம்? கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அதில் போட்டியாளர்கள் பாவனி, நிரூப், அபிநய் ஆகியோர் தாமரையை நாமினேட் செய்கின்றனர். அதே போல ராஜு, அக்ஷரா இருவரும் ப்ரியங்காவை நாமினேட் செய்கின்றனர். தொடர்ந்து தாமரை செல்வி, ப்ரியங்கா மற்றும் பாவனியை நாமினேட் செய்கிறார். இதில் தாமரை உண்மையாக இருக்கிறார்களா, அல்லது பொய்யாக இருக்கிறார்களா என்று சந்தேகம் எழுப்பியுள்ளார் அபிநய். அதே போல ப்ரியங்கா மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதாகவும், அவரை பார்க்கும் போது எரிச்சல் உண்டாவதாகவும் அக்ஷரா கூறிவிட்டு அவரை நாமினேட் செய்கிறார்.