ஜூலி, வனிதா கலந்த கலவை அபிஷேக் – “பிக்பாஸ் சீசன் 5” இன்றைய எபிசோட்! 2வது ப்ரோமோ!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் 18வது நாளில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அபிஷேக்கின் திருவிளையாடல் ஆரம்பமாகி உள்ளது.
yht:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 18 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்றைய எபிசோடில் பரபரப்பு கூடி இருக்கிறது. இது வரை இல்லாத அளவு அனைவரும் தனி தனியாக கேம் விளையாடுகின்றனர். கடந்த சீசன்களில் கேங் சேர்த்து விளையாடி வந்தனர், ஆனால் இந்த சீசன் அப்படி இல்லை யார் யார் எப்படி என மக்கள் கணிக்கவே முடியாமல் இருக்கிறது. மக்களை குழப்பத்திலேயே வைத்திருக்க அபிஷேக் ஒரு ஆளே போதும் போல தெரிகிறது.
விஜய் டிவியின் “காமெடி ராஜா கலக்கல் ராணி” நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு – ரசிகர்கள் வருத்தம்!
இந்நிலையில் அபிஷேக்கின் திருவிளையாடல் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அபிஷேக் பாவனி உடன் பேசுகிறார். டாப் 5-ல் நாம் இருக்க வேண்டும் என அவர் சொல்கிறார். வருண் அதில் வர கூடாது என கொளுத்தி போடுகிறார். எதாவது செய்து வருணை இங்கே விடாதே என அவர் சொல்ல, வருண் இங்கே கால் வச்சான் அவ்வளவு தான் என சொல்கிறார். அதே புறம் வருணிடம் சென்று உன்னை ஹாலிற்கு விட மாட்டார்கள் என சொல்கிறார்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய வெண்பா இவர் தானா? ரசிகர்கள் அதிர்ச்சி!
என்னை விடமாட்டாங்களா என கேட்க உன்னை கடைசி வரை விடமாட்டார்கள் என சொல்கிறார். உடனே ஸுருதி அது அவங்க கேங் பேசி முடிவு செய்வார்கள் உனக்கு என்ன என கேட்க, இப்போ என்னை பொறுத்தவரை அது வருணிற்கு போக கூடாது என சொல்கிறார். பின் வருணிடம் சென்று ஹால் செல்ல டார்கெட் பண்ணு என சொல்கிறார். பேசி போகவா என வருண் சவால் விடுவதாக சொல்கிறார். பின் எதாவது செய்ங்க என பாவனியை உசுப்பேத்துகிறார். அபிஷேக் பார்த்தால் ஒரு பக்கம் ஜூலி மறுபக்கம் வனிதா போல இருப்பதாக இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.