டிவி ஸ்டேஷனாக மாறும் ‘பிக்பாஸ்’ வீடு, மீண்டும் சண்டையிடும் தாமரை & ப்ரியங்கா – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் அனைவரும் இரு வேறு குழுக்களாக பிரிந்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளிப்பது போல வெளியான ப்ரோமோ தற்சமயம் பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.
பிக்பாஸ் ப்ரோமோ
தற்போது 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசன் துவங்கிய காலத்தில் கலகலப்பாக இருந்து வந்த சில போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, பிரச்சனை, பிரிவுகள் எழுந்து வருகிறது. இதற்கு மத்தியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
“பாக்கியலட்சுமி” சீரியல் இனியாவின் செல்ல பெயர்கள் – இன்ஸ்டா பதிவு! ரசிகர்கள் உற்சாகம்!
இப்படி இருக்க ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான டாஸ்க் ஒன்று தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் 13 போட்டியார்களும் 2 குழுவாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு குழுவுக்கு ரெட் டிவி என்றும் மற்றொரு குழுவுக்கு ப்ளூ டிவி என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அதில் ரெட் டிவி சார்பில் அபிஷேக் மற்றும் சிபி இருவரும் மற்ற போட்டியாளர்களிடம் பேட்டி காண்கிறார்கள்.
அதே போல ப்ளூ டீம் சார்பில் ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி இருவரும் மற்ற போட்டியாளர்களின் விமர்சனங்களை கேட்கிறார்கள். இப்போது இந்த டாஸ்க் துவங்குகிறது. அதில் ‘சிங்கத்தின் பிடரியில் ஊஞ்சலாடிய இமான்’ என ரெட் டீம் சார்பில் அபிஷேக் சொல்ல மறுபக்கத்தில் ‘ப்ரியங்காவின் பரிதாபங்கள் என’ ப்ளூ டீம் சார்பில் ராஜு நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறார். அடுத்ததாக, ஸ்டேஜில் வைத்து ‘இப்போது தான் எனக்கு புரிந்திருக்கிறது, இந்த வீட்டில் யார் யாரை எல்லாம் நம்ப வேண்டும் யார் யாரையல்லாம் நம்ப கூடாது’ என ப்ரியங்கா, வருணிடம் பேசுகிறார்.
கோபியை விவாகரத்து வாங்க தூண்டும் ராதிகா, பாக்கியாவின் நிலை? சீரியலின் அடுத்த ட்விஸ்ட்!
தொடர்ந்து தாமரையிடம், ப்ரியங்கா உங்களுக்கு எந்த மாதிரியான நண்பர் என அபிஷேக் கேட்க, ‘ப்ரியங்கா எனக்கு நண்பரே கிடையாது. நான் மட்டும் தான் பேச வேண்டும் மற்றவர்கள் எனக்கு பின்னால் இருக்க வேண்டும் என எண்ணுவது ப்ரியங்கா தான். இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன்’ என தாமரை சொல்லிக்கொண்டிருக்கும் போது ப்ரியங்கா அங்கிருந்து எழுந்து சென்று விடுவது போல இந்த ப்ரோமோ முடிவடைகிறது.