மூத்த குடிமக்களுக்கான அட்டகாசமான NPS திட்டம் – முழு பலன்கள் இதோ!!
NPS திட்டத்தில் சேருவதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
NPS திட்டம்:
மூத்த குடிமக்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) பல சிறப்பான பலன்களை வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்காகவே துவங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது பொது, தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்காகவும் இயங்கி வருகிறது. அதாவது, மூத்த குடிமக்களின் வயது மற்றும் ஓய்வூதிய வயதின் அடிப்படையில் NPS திட்டத்திற்கான பலன் வழங்கப்படுகிறது.
பண்டிகையை முன்னிட்டு உயர்த்தப்பட்ட ஆட்டோ, ரிக்ஷா கட்டணம் – ஒரு மாதம் அமல்!
தற்போது NPS திட்டத்தினால் என்னென்ன பலன் என்பதை காணலாம். இந்த திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் ஒடுங்குபடுத்தப்பட்ட முயற்சி என்பதால் சந்தாதாரர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். குறிப்பாக NPS ல் வரி விதிக்கப்படவில்லை. மேலும், இந்த திட்டத்தின் கீழ் நிதி நிலைமையை பொறுத்து எந்த நேரத்திலும் விரும்பிய தொகையை சேமிக்க இயலும். அதே நேரத்தில் எந்த நேரத்திலும் பங்களிப்பை அதிகரிக்கவும், குறைக்கவும் முடியும்.