‘சமையல் அம்மா’ என தூக்கத்தில் உளறும் ஹேமா, பரிதவிக்கும் பாரதி – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதி, கண்ணம்மா கூறியதை வீட்டினரிடம் கூறி கொந்தளிக்கிறார். சௌந்தர்யா மற்றும் வேணு என இருவரும் கண்ணம்மாவை எப்படி வீட்டிற்கு வரவழைக்கலாம் என்று யோசிக்கின்றனர்.
“பாரதி கண்ணம்மா” சீரியல்
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா குறித்து வீட்டினர் பாரதியிடம் கேட்கின்றனர். பாரதி கண்ணம்மா கூறிய அனைத்தையும் கூறி கொந்தளிக்கிறார். முதலில், யாருமே பாரதி கூறியதை நம்பவில்லை. இதனால் பாரதி உச்சக்கட்ட கோபம் அடைகிறார். எப்போதுமே என்னை இந்த வீட்டில் யாருமே நம்ப மாட்டீர்கள் என்று எரிச்சல் அடைகிறார். பின், பாரதி கூறியதை நம்புவதால், வீட்டினரும் கோபம் அடைகின்றனர். இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்று சௌந்தர்யா மற்றும் வேணு இருவரும் நினைக்கின்றனர்.
திருப்பதி 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் – மாநில அரசின் புதிய திட்டம்!
பின்னர் ஹேமா தூங்கும் போது சமையல் அம்மா என்று புலம்புகிறார். இதனை கேட்கும் பாரதி அவரிடம் தூங்கும் போதே பேசுகிறார். தான் ஹேமாவிற்காக கண்ணம்மாவிடம் சென்று பேசியது, அதற்கு கண்ணம்மா திமிராக பதில் கூறியது என்று அனைத்தையும் கூறுகிறார். அதே போல் ஒரு தந்தையாக தான் கண்ணம்மாவிடம் பேசியதாகவும், அதனை அவர் நிராகரித்து கூறியதை நினைத்து வருந்துகிறார்.
TN Job “FB Group” Join Now
பின், சௌந்தர்யா மற்றும் வேணு இருவரும் கண்ணம்மா இந்த வீட்டிற்கு வந்தால் பல வருடங்களுக்கு பிறகு பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் தங்குவது போல ஆகும் என்றும், கூடிய விரைவில் அவர்களது வாழ்வில் மாற்றம் வர வாய்ப்புகள் உள்ளது என்று நினைக்கின்றனர். கண்ணம்மா ஹேமாவின் மேல் அதிக அளவில் பாசம் வைத்திருந்தாலும், தனது தன்மானத்தையும் விட்டு கொடுத்து இந்த வீட்டிற்கு மீண்டும் வர மாட்டாள் என்று சௌந்தர்யா கூறுகிறார். இது குறித்து பாரதியிடம் பேச வேண்டும் என்று யோசிக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!