திருப்பதி 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் – மாநில அரசின் புதிய திட்டம்!
திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆந்திர மாநில பேருந்துகளில் சிறப்பு சலுகையாக 300 ரூபாய் பயண கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 1000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும் ஆந்திர போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
திருப்பதி பயண கட்டணம்:
ஆந்திராவில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது வழக்கம். நம் நாட்டு பக்தர்களும் வெளிநாட்டு பயணிகளும் வருகை புரிவர். இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் ஆந்திர திருப்பதி கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஊரடங்கின் போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆண்டுதோறும் அதிக வருவாய் ஈட்டும் கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் ஊரடங்கால் வருவாய் இழந்தது.
11ம் வகுப்பில் இடைநின்ற மாணவர்களும், 12ம் வகுப்பில் தேர்ச்சி – புதிய குழப்பத்தில் கல்வித்துறை!
தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் கோவில் நடை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோயில் நிர்வாகத்தினரால் தினசரி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் தடுப்பூசிகள் பயன்பட்டால் கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதால் திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவை தொடங்கியுள்ளது. அதனால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் அனைவரும் முயலுவதால் புக் செய்ய முடிவதில்லை என புகார் எழுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த நேரத்தில் திருப்பதி பக்தர்களுக்கு சிறப்பு சலுகையாக ஆந்திர மாநில பேருந்துகளில் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் திருப்பதி பக்தர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது. முதலில் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி போன்ற பெருநகரங்களில் இருந்து திருப்பதி செல்லும் ஆந்திர பேருந்துகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 1000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும் ஆந்திர போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.