பாரதி, கண்ணம்மாவை 6 மாதம் சேர்ந்து வாழ உத்தரவிடும் நீதிபதி, உற்சாகத்தில் சௌந்தர்யா – பரபரப்பு ப்ரோமோ!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இத்தனை நாள் பட்ட கஷ்டங்களுக்கு பலனாக கண்ணம்மா, பாரதியுடன் 6 மாத காலம் இணைந்திருக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிடுவது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
பாரதி கண்ணம்மா
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது அடுத்த திருப்பம் நடந்தேறியுள்ளது. அந்த வகையில் கடந்த சில எபிசோடுகளாக வாழ்வா, சாவா போராட்டத்தில் சிக்கி தவித்த கண்ணம்மாவுக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது. இதுவரை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பிரிந்திருந்த பாரதியும், கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேருவார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்க ஹீரோ அருண் வாங்கும் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
இப்போது கண்ணம்மாவிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடி இருக்கும் பாரதிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக விவாகரத்து வழக்கில் ஒரு முக்கிய தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இதுவரை பாரதி மற்றும் கண்ணம்மாவிடம் விவாகரத்து குறித்த விஷயங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி, கண்ணம்மாவுக்கு சாதகமான தீர்ப்பை சொல்லி பாரதியை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.
அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய ப்ரோமோவில், விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி ‘பாரதி, கண்ணம்மாவுக்கு இடையே புரிதல் இல்லாததினால் இருவரும் கோர்ட் வரை வந்திருக்கீங்க. அதனால் பாரதியின் விவாகரத்து வழக்கிற்கு இந்த கோர்ட் சம்மதிக்கவில்லை. அதற்கு பதிலாக பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து 6 மாத காலம் ஒன்றாக வாழ வேண்டும் என இந்த கோர்ட் உத்தரவிடுவதாக தீர்ப்பு கூறுகிறார். இந்த தீர்ப்பால் ஒரு பக்கம் பாரதி வருத்தத்தில் இருந்தாலும், மறுபக்கத்தில் கண்ணம்மாவும், சௌந்தர்யா குடும்பமும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.