அடம் பிடிக்கும் பாரதியை தன் வழிக்கு கொண்டு வரும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
தற்போது கண்ணம்மாவின் வீட்டில் தங்கி இருக்கும் பாரதி, சாப்பிட மாட்டேன், குடிக்க மாட்டேன் என அடம் பிடித்து வர கண்ணம்மா, பாரதியை அவரது வழிக்கு கொண்டு வருவது தான் அடுத்தகட்ட கதைக்களம் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
சமீப காலமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் எபிசோடுகள் மிகவும் கலகலப்பாக, ஸ்வாரசியமாக நகர்ந்து வரும் நிலையில் அடுத்தகட்டமாக பாரதி, கண்ணம்மாவுக்கு இடையே நெருக்கம் உருவாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பல ஆண்டுகளாக பிரிந்து இருந்த பாரதியும் கண்ணம்மாவும் மீண்டும் சந்தித்து கொள்ளும் போது முட்டி மோதிக்கொள்கின்றனர். இவர்கள் இருவரும் எப்போது தான் ஒன்று சேருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது இருவரும் 6 மாத காலம் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்ற நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
‘தல’ என்ற பட்டத்தை மறுப்பதற்கான காரணம்? நடிகர் அஜித் தரப்பு விளக்கம்!
இதனால் வேறு வழியே இல்லாமல் கண்ணம்மாவின் வீட்டுக்கு வரும் பாரதி, கண்ணம்மாவை வெறுப்பேற்றி அங்கிருந்து கிளம்ப வேண்டும் என திட்டம் போடுகிறார். அதற்காக சாப்பிட மாட்டேன், குடிக்க மாட்டேன் என பாரதி அடம் பிடிக்க கண்ணம்மா அவரை தனது வழிக்கு கொண்டு வருவது போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது. அதாவது, பாரதிக்காக தனது வீட்டில் டைனிங் டேபிள் வாங்கிப் போடும் கண்ணம்மா, சமைத்து பாரதிக்கு பரிமாறுகிறார். அதே போல சாப்பிட மாட்டேன் என ஒரேடியாக அடம் பிடித்து வந்த பாரதியும் சாப்பிடுவதற்கு ஒப்புக்கொள்கிறார்.
திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘பிக் பாஸ்’ ஜூலியிடம் பண மோசடி – காவல் நிலையத்தில் புகார்!
இப்படி இருக்க லட்சுமி மற்றும் ஹேமாவை பார்ப்பதற்காக பாரதியின் வீட்டுக்கு கண்ணம்மா செல்ல, அங்கு கண்ணம்மா வரும் முன்னதாகவே பாரதி வந்து விடுகிறார். பிறகு இருவரும் வழக்கம் போல செல்ல சண்டையிட்ட பின்னர், தங்களது குழந்தைகளுடன் நேரங்களை செலவிடுவது போல புதிய கதைக்களம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எப்படி என்றாலும், இனி எவ்வித பிரச்சனையும் இல்லாமல் பாரதியும் கண்ணம்மாவும் எப்படியாவது ஒன்று சேர வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.