‘தல’ என்ற பட்டத்தை மறுப்பதற்கான காரணம்? நடிகர் அஜித் தரப்பு விளக்கம்!
தமிழ் சினிமாவில் ‘தல’ என்ற தனி பட்டத்தை அடைமொழியாக கொண்டு அழைக்கப்பட்டு வந்த நடிகர் ஆவர். திடீரென்று தன்னை ரசிகர்கள் தல என்று அழைக்க வேண்டாம் என்று அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார், இது தொடர்பான விளக்கம் அவர் தரப்பில் இருந்து அளிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் அறிக்கை:
தமிழ் சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் சாதாரண நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் அஜித் குமார். ராஜாவின் பார்வையிலே படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடிகர் விஜய் உடன் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். தொடர்ந்து நடித்து வந்த சில படங்களிலேயே அதிக கவனத்தை பெற்றவர். காதல் கோட்டை படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் விருப்ப நாயகனாக மாறிவிட்டார். அதன்பிறகு அஜித் நடித்து வந்த படங்களில் அஜித்திற்கு ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க உயர்த்தியது.
“பாக்கியலட்சுமி” இனியாவிடம் பலமுறை கேட்ட ஒரே கேள்வி – கடுப்பாகி அவர் சொன்ன பதில்!
அஜித்தை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றிய படம் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளியான தீனா திரைப்படம் தான். அந்த படத்தில் இருந்து அஜித்தை அனைவரும் தல என்று அழைக்கத் தொடங்கினார்கள். மேலும், நடிகர் அஜித் எப்போதும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். அவரது தனிப்பட்ட கருத்தை யாரும் பின்பற்ற தேவையில்லை என்ற கொள்கையைக்கொண்டவர். இதனால் தனக்கு இருந்த ரசிகர் மன்றங்களையும் கூட கலைக்க கூறியவர். அஜித் நடிப்பில் வெளியான படங்களை மக்கள் அஜித் மீது கொண்ட அன்பின் காரணமாக கொண்டாடி வருகின்றனர். அடுத்ததாக போனி கபூர் தயாரிப்பில் வலிமை படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.
திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘பிக் பாஸ்’ ஜூலியிடம் பண மோசடி – காவல் நிலையத்தில் புகார்!
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக அஜித் அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இனி தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என்றும், அஜித் என்றோ அல்லது அஜித் குமார் என்றோ மட்டும் அழைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், அஜித்தின் மக்கள் தொடர்பாளர், அஜித் பெற்றோர் வைத்த பெயரை வைத்து அழைப்பதையே விரும்புகிறார் என்றும், அதனால் தான் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.