விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வில்லி பரீனா வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வில்லி ரோலில் கலக்கி வரும் வெண்பா பிரசவத்திற்கு பின் மீண்டும் அதே பொலிவுடன் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
சீரியலில் ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரம் இல்லாமல் வில்லியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பரீனா. அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் கொலை செய்யும் அளவிற்கு பயங்கர வில்லியாக இருக்கிறார். சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அவரது கதாபாத்திரம் இருக்கிறது. பாரதி மனதை மாற்றி கண்ணம்மாவை அவர் கஷ்டப்பட வைத்ததால் பல எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறார். தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமாகி தன்னுடைய நடிப்பு திறமையால் அவர் கலக்கி வருகிறார்.
‘அம்மன்’ சீரியல் அமல்ஜித் & பவித்ரா ஜோடிக்கு திருமணம்? அவர்களே அளித்த பதில்! ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு ஒரு மாதம் முன்னர் வரை அவர் சீரியலில் நடித்து வந்த நிலையில், அதன் பின் குழந்தை பிறந்து மீண்டும் ஒரே மாதத்தில் நடிக்க வந்துள்ளார். அதனால் நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்து பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அவர் இல்லாத போது பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ தொடங்கி உள்ள நிலையில், பாரதி திருந்தியது போல காட்டப்பட்டது.
பாக்கியா, இனியவை விசாரிக்கும் போலீஸ் & கோவத்தில் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த எபிசோட்!
ஆனால் தற்போது மீண்டும் வெண்பா என்ட்ரி கொடுத்து இருப்பதால் பாரதி மீண்டும் கண்ணம்மா மீது வெறுப்பை கொட்டுவார். அடுத்ததாக சௌந்தர்யா வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் கட்டாயம் வெண்பா பிரச்சனை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெண்பா பரீனா பிரசவத்திற்கு பின் மீண்டும் அதே அழகுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த பாரதி கண்ணம்மா ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.