‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடந்துள்ள முக்கிய மாற்றம் – புது நடிகரின் மனதை உருக்கும் பதிவு!
பாரதி கண்ணம்மா தொடரில் பல நாட்களுக்கு முன்பிருந்து எதிர்பார்த்து வந்த முக்கிய கதாபாத்திரத்தின் மாற்றம் நடந்துள்ளது. புது நடிகர் இது குறித்து ரசிகர்களின் மனதை உருகும் பதிவு ஒன்றினை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
முக்கிய மாற்றம்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் ஆரம்பித்தது முதல் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க தொடங்கியது. தொடர்ந்து டிஆர்பியில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சீரியலின் மாற்றம் செய்யப்பட்ட பின்னரும் கூட அதிக ரசிகர்களை தக்க வைத்துள்ளது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக மாறி விட்டது. தொடரின் கதை அவ்வளவு விறுவிறுப்பாக செல்கிறது. பல மாதங்களாக பாரதியும், கண்ணம்மாவும் எதிர் எதிர் துருவங்களாக உள்ளது போல் காட்சிகள் வருகின்றது.
‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனிபர் நெகிழ்ச்சி – மக்கள் கொடுத்த வரவேற்பு!
இவர்களை சேர்த்து வைப்பதற்கு சௌந்தர்யா பல விதங்களில் முயற்சி செய்து வருகிறார். கதையின் தொடக்கத்தில் கண்ணம்மாவை பிடிக்காமல் கெடுதல்களை செய்து வந்த அஞ்சலி, கண்ணம்மா வீட்டை விட்டு சென்ற பின்னர் முழுவதுமாக மாறி விட்டார். தற்போது அஞ்சலியின் வளைகாப்பு நடப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக அஞ்சலி தனது இன்ஸ்டாவில் இருவரும் உள்ளது போல் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு அகிலனை டேக் செய்து இனி இது போன்ற காட்சிகளை மிஸ் செய்வோம் என்று கூறியிருந்தார்.
TN Job “FB Group” Join Now
இதனால் சீரியலில் இருந்து யாரோ ஒருவர் விலக உள்ளதாக செய்திகள் பரவியது. இது குறித்து சமீபத்தில் அகிலன் தனது சமூக வலைத்தளத்தில் தான் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதனால் சுகேஷ் என்ற புது நடிகர் ஒருவர் அகிலன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். நேற்று முதல் சுகேஷ் வரும் காட்சிகள் சீரியலில் ஒளிபரப்பாகி உள்ளது. இதனால் சுகேஷ் தனது இன்ஸ்டாவில் அகிலனின் ரசிகர்கள் என்னை ஏற்பதற்கு சிரமமாக இருக்கும். உங்கள் எல்லோரின் ஆசிர்வாதமும் தேவை என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.