மார்ச் 31ம் தேதி வங்கிகள் இயங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிகள் இயங்கும்:
நடப்பாண்டில் மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது 13 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச்,31 ஞாயிறு அன்று பொதுத் துறை (ஏஜென்சி) வங்கிகள் இயங்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து ஆர்பிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.13 முதல் கோடை விடுமுறை; பள்ளி மாணவர்களுக்கு குஷி – அரசின் அறிவிப்பு!
இதில் ஞாயிற்றுக்கிழமை. 2023-24 நிதியாண்டு தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கில் வைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசாங்க ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகளைக் கையாளும் அனைத்து கிளைகளும் இந்த நாளில் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் இறுதி நாள் என்பதால் மார்ச் 31 ஆம் தேதி வங்கிகளையும் திறந்துவைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு