வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அடுத்த வாரங்களுக்கான விடுமுறை பட்டியல்!
தற்போது நடந்து கொண்டிருக்கும் அக்டோபர் மாதத்தில் தொடர்ச்சியாக பண்டிகை காலங்கள் வருவதால், அடுத்த வாரங்களில் வங்கிகள் சில நாட்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும். அதனால் வாடிக்கையாளர்கள் விரைந்து வங்கி சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்கி விடுமுறை
இந்த வருடத்தில் மீதமிருக்கும் 3 மாதங்களில் தொடர்ச்சியாக பண்டிகை காலங்கள் வரவிருக்கிறது. இதில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 21 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில், வங்கி வாடிக்கையாளர்கள் அந்தந்த வங்கி கிளைகளில் பணம் எடுக்கவோ அல்லது பணத்தை டெபாசிட் செய்யவோ முடியாது. இருப்பினும், இந்த நாட்களில் ATMகள், மொபைல் பேங்கிங் சேவைகள் தொடர்ந்து கிடைக்கும்.
தமிழகத்தில் ஆயுத பூஜை நாளில் அரசு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் அறிவிப்பு!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), மூன்று பிரிவுகளின் கீழ் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் ஒரு பிரிவுக்கு உட்பட்டு இம்மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வார தொடக்கத்தில், அரையாண்டு வங்கிக் கணக்குகளை மூடுவதால் வங்கிகள் அக்டோபர் 1 ஆம் தேதி கேங்டாக்கில் வங்கிகள் மூடப்பட்டன. அக்டோபர் 2ம் தேதியன்று, மகாத்மா காந்தி ஜெயந்தி காரணமாக நாட்டின் அனைத்து நகரங்களிலும் வங்கிகள் மூடப்பட்டன.
இதைத் தொடர்ந்து அடுத்து வரவிருக்கும் வாரத்தில் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில்
- அக்டோபர் 12 – துர்கா பூஜையை முன்னிட்டு அகர்தலா மற்றும் கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்படும்.
- அக்டோபர் 13 – துர்கா பூஜை மற்றும் மகா அஷ்டமி தினத்தன்று அகர்தலா, புவனேஸ்வர், காங்டாக், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்படும்.
- அக்டோபர் 14 – துர்கா பூஜை, தசரா, மகா நவமி மற்றும் ஆயுத பூஜையையொட்டி அகர்தலா, பெங்களூரு, சென்னை, கேங்டாக், கவுகாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்படும்.
- அக்டோபர் 15 – துர்கா பூஜை, தசரா மற்றும் விஜய தஷமியை முன்னிட்டு இம்பால் மற்றும் சிம்லா தவிர அனைத்து நகரங்களிலும் வங்கிகள் மூடப்படும்.
- அக்டோபர் 16 – துர்கா பூஜையையொட்டி கேங்டாக்கில் வங்கிகள் மூடப்படும்.
தமிழகத்தில் வாரத்தின் 7 நாட்களும் கோயில்கள் திறப்பு? அமைச்சர் விளக்கம்!
- அக்டோபர் 18 – கேடி பிஹு காரணமாக கவுகாத்தியில் வங்கிகள் மூடப்படும்.
- அக்டோபர் 19 – முகமது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு அகமதாபாத், பெலாப்பூர், போபால், சென்னை, டேராடூன், ஹைதராபாத், இம்பால், ஜம்மு, கான்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்படும்.
- அக்டோபர் 20 – மகரிஷி வால்மீகியின் பிறந்தநாள், லக்ஷ்மி பூஜை, ஐடி-இ-மிலாத் பண்டிகையையொட்டி அகர்தலா, பெங்களூரு, சண்டிகர், கொல்கத்தா மற்றும் சிம்லாவில் வங்கிகள் மூடப்படும்.
- அக்டோபர் 22 – ஈத்-இ-மிலத்-உல்-நபியைத் தொடர்ந்து ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும்.
- அக்டோபர் 26 – இணைப்பு தினத்தன்று ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும்.
இந்த விடுமுறைகள் தவிர, வங்கிகள் அக்டோபர் 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் காரணமாக மூடப்படும். தொடர்ந்து அக்டோபர் 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை காரணமாக வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.