தமிழக அரசு பள்ளிகளில் வங்கி கணக்கு விவரங்கள் சேகரிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வங்கி கணக்கு விவரங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சுற்றறிக்கை:
தமிழகத்தில் வெகு நாட்களுக்கு பிறகு முதல் கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்ததாக 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நோய் தடுப்பு பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதத்தில் மூன்று வகையான போனஸ்? எதிர்பார்ப்பு!
முன்னேற்பாடு பணியின் ஒருபகுதியாக எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. தினசரி மாணவர் சேர்க்கை விவரத்தை எமிஸ் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வங்கி கணக்கை ரொக்க இருப்பு விவரங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அதில் தமிழக அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கி கணக்கு விவரங்கள் இருப்பு தொகை குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். மற்ற அலுவலகங்களை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை கீழ் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் வங்கி கணக்கு விவரங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இது முக்கிய பணி என்பதால் அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.