தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் மிலாடி நபி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் முதலியவற்றிற்கு நாளை விடுமுறை வழங்கி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கடைகள் விடுமுறை:
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிலாடி நபி பண்டிகையும் ஒன்று. நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி வியாழக்கிழமை அன்று பிறை தென்பட்டது. இதை வைத்து வரும் 19.10.2021ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார். எனவே அன்றைய நாளில் மது விற்பனைக்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து! அரசாணை வெளியீடு!
இந்த பண்டிகை நாளில் அரசு விடுமுறையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முக்கிய அரசு விடுமுறை தினங்களில் மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்படும். அதனை தொடர்ந்து தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபானக் கடைகளை ஒட்டி உள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1.28 லட்சம் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பு – கல்வித்துறை நடவடிக்கை!
மேலும் அந்த நாளில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து தற்போது உள்ளாட்சி தேர்தல் காரணமாகவும் மதுக்கடைகள் மூடப்பட்டது. தற்போது மிலாடி நபி பண்டிகையை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.