வாழைத்தாரின் விலை கடும் உயர்வு – விளைச்சல் குறைவின் எதிரொலி.. விவசாயிகள் வேதனை!

0
வாழைத்தாரின் விலை கடும் உயர்வு - விளைச்சல் குறைவின் எதிரொலி.. விவசாயிகள் வேதனை!
வாழைத்தாரின் விலை கடும் உயர்வு - விளைச்சல் குறைவின் எதிரொலி.. விவசாயிகள் வேதனை!
வாழைத்தாரின் விலை கடும் உயர்வு – விளைச்சல் குறைவின் எதிரொலி.. விவசாயிகள் வேதனை!

தூத்துக்குடி வாழைக்காய் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் வாழைத்தாரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் விளைச்சலும் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வாழைத்தார் விலை உயர்வு:

தமிழகத்தில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விளைச்சல் குறைவால் அதன் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது. இதனால் சாமானிய மக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது வாழைத்தாரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வாழை விவசாயத்திற்கு தேவையான நீர் சரியான நேரத்தில் கிடைக்காததால் அதன் விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் மெட்ரோ ரேஞ்சுக்கு மாறப்போகும் பறக்கும் ரயில்கள் – அரசின் புதிய திட்டம்!

வழக்கமாக தேனி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடிக்கு 3,500 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது விளைச்சல் இல்லாததால் 1000 வாழைத்தார்கள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக செவ்வாழைதார் ரூ.1000 -ல் இருந்து 1,400 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாட்டுபழத்தார் ரூ. 800 முதல் ரூ.1200க்கு கற்பூரவள்ளி கோழிக்கூடு போன்ற வாழைத்தார் ரூ. 550 முதல் ரூ.800 வரை விலை உயர்ந்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!