தமிழக திருக்கோயில்களில் 8, 11 ஆம் தேதிகளில் பக்தர்களுக்கு தடை – அறநிலையத்துறை தகவல்!

0
தமிழக திருக்கோயில்களில் 8, 11 ஆம் தேதிகளில் பக்தர்களுக்கு தடை - அறநிலையத்துறை தகவல்!
தமிழக திருக்கோயில்களில் 8, 11 ஆம் தேதிகளில் பக்தர்களுக்கு தடை - அறநிலையத்துறை தகவல்!
தமிழக திருக்கோயில்களில் 8, 11 ஆம் தேதிகளில் பக்தர்களுக்கு தடை – அறநிலையத்துறை தகவல்!

தமிழகத்தில் ஆடி அமாவாசை தினம் மற்றும் ஆடி பூரம் திருநாளை முன்னிட்டு அனைத்து திருக்கோயில்களிலும் நாளை (ஆகஸ்ட் 8) மற்றும் 11 ஆம் தேதி அன்று பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

பக்தர்களுக்கு தடை

கொரோனா 2 ஆம் அலை பரவல் சற்றே உயர்ந்து வந்தததையடுத்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் முக்கிய பகுதிகள் அனைத்தையும் மூட வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவிர ஆகஸ்ட் 9 முதல் 23 ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து மதவழிபாட்டு தலங்களை மூடவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இதனிடையே முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா, ஆடிப்பெருக்கு தினத்தை தொடர்ந்து கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் என்பதால், தமிழகத்தில் உள்ள முக்கியமான திருக்கோயில்களில் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 8) ஆடி அமாவாசை மற்றும் ஆடி பூரம் (ஆகஸ்ட் 11) திருவிழாக்களை முன்னிட்டு பக்தர்கள் கோயில்களுக்கு வர தடை விதித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

அதாவது நாளை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கடற்கரை, நீர்நிலைகள், கோயில் தெப்பங்குளங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு மற்றும் வரும் 11 ஆம் தேதி ஆடிப்பூர திருவிழாவுடன் அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்பதால் திருக்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நாட்களில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது கூடுதல் தகவல்.

TN Job “FB  Group” Join Now

இதற்கு முன்னதாக தமிழகம் முழுவதும் கடந்த 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 அம தேதி வரை கோவில்களில் பொதுமக்கள் அனுமதி தடை செய்யப்பட்டது. இதனிடையே மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை வழிபாட்டு தலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மட்டும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதலாக பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!