கோபியின் விவாகரத்து திட்டத்தை கண்டுபிடித்த எழில், மாட்டிக் கொண்ட கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியின் உண்மையான முகம் தெரிந்தவர்களில் ஒருவர் தான் எழில், இந்நிலையில் பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து வாங்கிய விஷயம் எழிலிற்கு தெரிய வர அடுத்து கதையில் பெரிய திருப்பம் வர போகிறது.
பாக்கியலட்சுமி:
சின்னத்திரையில் பல சீரியல்கள் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படுவதால் ஏகப்பட்ட குடும்ப ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் இல்லத்தரசிகளின் கதை என்ற வாசகத்துடன் முடியும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இல்லத்தரசியான பாக்கியாவின் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களை பற்றியே கதை இருக்கிறது. தனது மாமியார் குடும்பத்தை தன்னுடைய குடும்பமாக நினைக்கும் பாக்கியா, குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அக்கறையுடன் கவனித்து கொள்கிறார்.
‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகும் ஆல்யா? அய்லா பிறந்தநாளும், வளைகாப்பும் ஒரே சமயத்தில்!
படிக்காத பெண்ணாக இருந்தாலும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்பதால் தனக்கு தெரிந்த சமையல் வேலையை கையில் எடுத்து அதில் சாதித்து காட்டுகிறார் பாக்கியா. அவருடைய கணவர் கோபி குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும், பெற்றோர்களுக்கு நல்ல மகனாக இருந்தாலும் பாக்கியாவிற்கு மட்டும் நல்ல கணவராக இருந்தது இல்லை. பாக்கியாவை பிடிக்காமல் திருமணம் செய்த அவர் இப்போது 40 வயதில் பிரிய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் பாக்கியாவின் அறியாமையை பயன்படுத்தி விவாகரத்து வாங்குகிறார்.
இந்த விஷயம் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் கோபியின் சுயரூபம் தெரிந்த கோபியின் தந்தை ராமமூர்த்தி உடல்நிலை சரி இல்லாமல் இருக்கிறார். அவரை பற்றிய உண்மை தெரிந்த மற்றொருவர் எழில், அவருக்கு கோபி விவாகரத்து வாங்கிய விவகாரம் தெரியவர, அவர் கோபியிடம் நல்லவன் போல நடித்து என் அம்மாவை குறை சொன்னாய் என கேள்வி கேட்கிறார். எழிலிடம் மாட்டிக் கொள்ளும் கோபி அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது அடுத்த வார கதையாக இருக்க போகிறது.