மயூராவிடம் கோபியை பற்றி சொல்லும் தாத்தா, பாக்கியாவிற்கு உண்மை தெரிய வருமா? இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூரா ராதிகாவுக்கு திருமணம் என சொல்ல, உண்மையை சொல்லிவிடலாம் என நினைக்கிறார். ஆனால் சொல்ல மனம் இல்லாமல் வருத்தப்படுகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூரா எல்லாரிடமும் கதை சொல்லி பேசிக் கொண்டிருக்க ராமமூர்த்தி மயூரா கோபி ராதிகா திருமணம் பற்றி சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது மயூராவிடம் போட்டோவை காட்டினால் அவள் சென்று ராதிகாவிடம் சொல்லுவாள் என நினைக்கிறார். அவர் போட்டோவை எடுத்துக் கொண்டு சென்று மயூராவிடம் காட்டுகிறார். ஆனால் மயூரா இது கோபி அங்கிள் அவரை எனக்கு தெரியும் அவர் தான் என்னுடைய அம்மாவை திருமணம் செய்து கொள்ள போகிறார் என சொல்ல பாக்கியா, ஈஸ்வரி, ஜெனி, இனியா என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ஈஸ்வரி நெஞ்சு வலி வந்து உட்காருகிறார். உடனே அப்படி செய்ய முடியாது என நினைத்து வருத்தப்படுகிறார் ராமமூர்த்தி, இவன் இந்த குடும்பத்தை விட்டு திருமணம் செய்யும் அளவிற்கு போனது என நினைத்து வருத்தப்படுகிறார். பின் மயூரா கிளம்ப ராமமூர்த்தி சோகமாக இருக்கிறார். ஈஸ்வரி என்ன ஆச்சு இந்த புகைப்படத்தை ஏன் மாட்டாமல் இருக்கீங்க என கேட்க கால் மறைத்துவிட்டது என சொல்லி போட்டோவை வருத்தத்துடன் மாட்டுகிறார். மறுபக்கம் ராதிகாவை கோபி ஹோட்டலுக்கு அழைத்து செல்கிறார்.
அங்கே பிசினஸ் பற்றி பேசிய கோபி ராதிகாவிடம் அலுவலகத்தில் உதவி செய்ததை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் ராதிகா கிடைத்ததை நினைத்து சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார். பின் ராதிகா நூடுல்ஸ் சாப்பிடுவதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். அவர் பாக்கியாவை ஹோட்டலுக்கு அழைத்து சென்று அங்கே நூடுல்ஸ் வாங்கி கொடுக்கிறார். அதை பாக்கியா சாப்பிட தெரியாமல் இருந்தது எல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.
பின் ராமமூர்த்தி வருத்தமாக இருப்பதை பார்த்து பாக்கியாவும் ஈஸ்வரியும் கவலைப்படுகின்றனர். உடம்பு எதுவும் சரி இல்லையா என பாக்கியா கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை தலைவலியாக இருப்பதாக ராமமூர்த்தி சொல்கிறார். பின் ராமமூர்த்திக்கு பிபி பார்க்க சொல்லி ஈஸ்வரி சொல்ல பாக்கியா பார்க்கிறார். அதில் 160 காட்டுகிறது. உடனே இவ்வளவு இருக்கிறது என இரண்டுபேரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.