சமையல் ஆர்டரில் சம்பாதித்த பணத்தை இழந்த பாக்கியா, கொந்தளிக்கும் கோபி – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!

0
சமையல் ஆர்டரில் சம்பாதித்த பணத்தை இழந்த பாக்கியா, கொந்தளிக்கும் கோபி - இன்றைய 'பாக்கியலட்சுமி' எபிசோடு!
சமையல் ஆர்டரில் சம்பாதித்த பணத்தை இழந்த பாக்கியா, கொந்தளிக்கும் கோபி - இன்றைய 'பாக்கியலட்சுமி' எபிசோடு!
சமையல் ஆர்டரில் சம்பாதித்த பணத்தை இழந்த பாக்கியா, கொந்தளிக்கும் கோபி – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!

சமையல் செய்து கிடைத்த பணத்தை இழந்தது தெரியாமல், பாக்கியா வங்கிக்கு பணம் எடுக்க செல்கிறார். பின்னர் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் வீட்டில் அனைவரும் கேள்வி கேட்டு பாக்கியாவை கடிந்து கொண்டவாறு இன்றயை ‘பாக்கியலட்சுமி’ சீரியல் வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மொத்தமாக பார்க்க வேண்டும் என எழிலிடம் ஆசையாக கூறிக்கொண்டிருக்கிறார் பாக்கியா. ஆனால் வங்கியில் பணம் இல்லை என வங்கி ஊழியர் கூற அதிர்ச்சியடைந்த பாக்கியா பயத்தில் அலறுகிறார். பின்னர் பாக்கியா, எழில் இருவரும் மேனஜரை பார்க்க செல்கின்றனர். அங்கு அக்கவுண்ட்டை செக் செய்து பார்த்து பணம் இல்லையென்று சொல்லுகிறார் மேனஜர்.

‘சாப்பாடு இல்லை, வாடகை கொடுக்க பணம் இல்லை’ இசைவாணி உருக்கம் – ‘பிக்பாஸ்’ 5 ப்ரோமோ ரிலீஸ்!

உங்கள் அக்கவுண்ட் விவரங்களை யாரு கிட்டயாவது கொடுத்தீங்களா என அவர் கேட்க பாக்கியா இல்லை என கூறுகிறார். பின்னர் பணத்தை இழந்தது தெரிந்ததும் அழுது கொண்டே வீட்டுக்கு வருகிறார் அவர். ஆனால் பணம் காணாமல் போன விஷயத்தை ஒருவரிடமும் சொல்ல வேண்டாம் என எழில், பாக்கியாவிடம் கூறுகிறார். இருவரும் பயந்து கொண்டே உள்ளே செல்கின்றனர். அங்கு ஆளாளுக்கு பணம் எங்கே என கேட்க, பாக்கியா அமைதியாக நிற்கிறார்.

அப்போது வங்கியில் ஏதோ டெக்னிக்கல் பிரச்சனை காரணமாக பணத்தை எடுக்க முடியவில்லை, இன்னும் 2 நாட்களில் உங்களுக்கு பணம் கிடைத்து விடும் என கூறி எழில் அவர்களை சமாளித்து அனுப்புகிறார். பின்பு எல்லாரும் அங்கிருந்து கிளம்ப வீட்டில் இருக்கும் அனைவரிடமும் வங்கியில் இருந்த பணம் காணாமல் போன விஷயத்தை கூறுகிறார்கள். அதனால் அதிர்ச்சியடைந்த ஒவ்வொருவரும் மாத்தி, மாத்தி பாக்கியாவை கேள்வி கேட்கின்றனர்.

‘பாக்கியலட்சுமி’ ரித்திகா விஜய் டிவி சீரியல் நடிகையான கதை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அப்போது பேங்க் டீடெய்ல்ஸ் யாருகிட்டயாவது கொடுத்தீங்களா என ஜெனி கேட்க, செல்வி நடந்ததை கூறுகிறார். பின்னர் பாக்கியா மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டதை அனைவரும் தெரிந்து கொள்கின்றனர். பணம் போன துக்கம் தாங்காமல் பாக்கியா தன்னை தானே குற்றம் சொல்லிக்கொண்டு அழுகிறார். அப்போது அங்கு வரும் மளிகை கடைக்காரர் பணத்தை கேட்டு கத்திவிட்டு போகிறார். பாக்கியாவின் செயலால் மொத்த குடும்பமும் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. இத்துடன் இன்றைய ‘பாக்கியலட்சுமி’ சீரியல் முடிந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!