பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை இந்த வயதில் அடித்து திருத்த முடியுமா? மனம் திறந்த ராமமூர்த்தி!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியின் தந்தையாக ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ரோசரி கோபி கதாபாத்திரம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் ஆதரவை பெற்ற முன்னணி சீரியல்கள் வரிசையில் இருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக பாக்கியாவாக சுசித்ரா என்பவர் நடித்து வருகிறார். மேலும் அவரது கணவராக கோபி கதாபாத்திரத்தில் சதீஸ் நடித்து வருகிறார். குடும்பத்தை மட்டுமே நினைக்கும் இல்லத்தரசியாக பாக்கியா இருக்க அவரது கணவர் கோபி தனது கல்லூரி காதலி ராதிகாவை அடைய வேண்டும் என நினைக்கிறார். ராதிகாவின் அம்மா அதை கண்டிக்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவிற்கு பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
மேலும் ராதிகாவும், கோபியும் கோவிலுக்கு வந்ததை பார்த்த ராமமூர்த்தி மகன் என்று பார்க்காமல் பாக்கியாவிற்கு எதாவது நடந்தால் உன்னை கொன்று விடுவேன் என சொல்கிறார். ராதிகாவிடம் உண்மையை சொல்ல போக ஆனால் சொல்ல முடியாமல் இருக்கிறார். இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் இவ்வளவு பெரிய பையன் தப்பு செய்தால் என்ன சொல்ல முடியும் விஷம் வைத்து கொள்ள தான் முடியும் என உணர்ச்சிகரமாக சொல்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய பின் ஐஸ்வர்யா செய்யும் காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!
இந்த வயசில் அடித்து திருத்த முடியாது என சொல்லும் அவர் கோபி அப்பா என்ற மரியாதை கொடுத்து பேசுகிறார். ஆனால் இந்த காலத்து பசங்க நான் அப்படி தான் இருப்பேன் உன்னால் என்ன செய்ய முடியும் என எதிர்த்து பேசுவார்கள் என சொல்கிறார். வசதியான குடும்பத்தில் இருந்து வந்து அவர் மிகவும் கஷ்டப்பட்டதாக சொல்கிறார். அவரது நடிப்பு திறமையை பாராட்டி அவரது ரசிகர்கள் கமெண்ட்களை செய்து வருகின்றனர்.